Sunday, July 22, 2012



கடற்கரையில்...
என் கை எனும் தூரிகையால்
தீட்டப்பட்ட ஓவியம்..
உன் பெயர்..!

கடல் மணலில்..
என் கையிலிருந்து 
உதிர்கின்ற 
உனது பெயரின் எழுத்துக்கள்..!

விரைந்து வரும் ...
அலைகளைப் பார்த்துப்
பயந்தபடி....
என் கைகளில் ஏற முயல்கிறது...
உன் பெயர்.

ஏனோ...
தயங்கித் தரை பார்க்கிறது.
வெறுமைப் பார்வையோடு நான்.

தடுக்க இயலாத என்னைத் தாண்டி...
அலைகளால் கலைந்து...
அழுதபடி செல்கிறது உன் பெயர்...
கடலுக்குள்...
முதல் நாள் பள்ளி செல்லும்
சிறு குழந்தைகள் போல.

இந்தக் கணத்தில்...
என்னை மறுக்கவும் இயலாமல்..
ஏற்கவும் இயலாமல்...
தவிக்கும் உன் முகமாய்...
மாறுகிறது
எனது முகம்.....

Saturday, July 14, 2012

இடையில் வந்து களைந்து செல்லும் கடனாளியே



யாருடைய துக்கத்தை அனுசரிக்க கண்ணீர் சிந்துகிறாய் மேகமே!!?
ஒரு வேலை வானம் தந்த வாக்குறுதியை நம்பி நீயும் ஏமாந்து போனாயோ???
வானத்தில் மிதக்கும் காரணத்தால்..
நீ ஒன்றும் வானத்திற்கு சொந்தமில்லை, வானமும் உனக்கு சொந்தமில்லை...!
நீ கூடி, இடித்து, மழையாக கண்ணீர் சிந்தினாலும்...
வானத்திற்கு நீ "இடையில் வந்து களைந்து செல்லும் கடனாளியே!!"


மனம் மரணமடைந்தது !!!















உன் வாசம் படிந்த கைக்குட்டை...
உன்னுடன் கண்டு களித்த சினிமா டிக்கெட்..
ஓயாமல் சிரிக்கும் உன் புகைப்படம்..
காதலுடன் நீ கைபேசியில் அனுப்பிய முத்தங்கள்.. என 
உன்னை மட்டுமே நினைத்துக் கொண்டே
இருக்க வேண்டும் என நான் பத்திரப்படுத்திய
உன் நினைவுகள் அனைத்தும் வெறும் 
நினைவுச் சின்னங்களாய் மட்டுமே போய் விடுமோ என
சத்தியமாய் நான் நினைக்கவில்லை...

என் வசந்த காலத்தின்
ஒரு பக்கம் முற்றிலும்
இலையுதிர் காலமாய் மாறிப்போனது..!

நீ எதை சொன்னாலும் 
அப்படியே நம்பிவிடும் மூடன் நான், 
என்று தெரிந்துதான் சொன்னாயோ..?
இதயத்தில்.. 
திராவகம் வீசிய உணர்வை ஏற்படுத்திய 
இரக்கமில்லாத...
கொடூரமான... 
அந்த 
"பிரிந்து விடுவோம்" 
என்ற வார்த்தையை..??

"மனம் மரணமடைந்தது" என்ற ஷெல்லியின்
வார்த்தையை அனுபவித்து உணர்கிறேன் இன்று ...!


விடையறியாமல்..!!



















வெகுதூரத்தில்
சிறு புள்ளியாய் உன் உருவம்…
இருந்தும்,
நீ விலகிச் சென்றதை
நம்ப மறுத்து
அசையாமல் அவ்விடமே
காத்து நிற்கும் எனது கால்கள்!!!

ஓயாமல் ஒதுங்கியும்
உன்னுடன் கழித்த
மணித்துளியை
புரட்டத் தவறாத என் மனம்…
இருந்தும்,
அருகில் இருப்பவர் கண்டும்
ஈரம் காய மறுக்கும்
எனது கண்கள்!!!

உனது பெயரை
உச்சரித்தே ஓடும்
எனது எண்ணங்கள்…
இருந்தும்,
எத்தனையோ கேள்விகளுக்கு
விடையறியாமல்
ஒட்டிக்கொண்ட உதடுகள்…
விடைகளுடன்
விக்கியபடி
எனது தொண்டைக்குழி !!!

வெட்கப்படுகிறேன்..!!!


இந்திய பேரரசின் பெருமை மிகு மனிதர்களாய் பெயர் கொண்டிருக்கும், திரு மன்மோகன், திருமதி மீரா குமார், பிரதீபா பாட்டில் போன்ற பொம்மை அரசியல் வாதிகளை நாடு கடத்தினால் என்ன!??? இந்தியாவின் முதல் பெண் சபா நாயகி, முதல் பெண் அதிபர் என்ற பெயர் இவர்களுக்கு எதற்கு..!? மன்மோகனை பற்றி நான் பேசவே விரும்பவில்லை..!

இன்று பாராளுமன்ற கூடத்தில் இந்தியாவின் வெளிப்பாடாக வெளியுறவு துறை அமைச்சரின் கூற்று வெட்ககேடானது..! இலங்கையுடன் வரலாறு சிறப்பு மிக்க நட்புறவு உள்ளதாம். அதனால் இலங்கையை ஆதரிக்கும் எண்ணத்தை கைவிடும் அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார்!

அங்கேயுள்ள தமிழர்களை காக்க வக்கு இல்லை நமக்கு. இலட்சக்கணக்கில் தமிழர்களை கொன்று குவித்த அந்த நாட்டுடன் நட்பு பாராட்ட அவசியம் என்ன!??? இதுவே ஆஸ்திரேலியாவில், சில இந்திய மாணவர்கள் தாக்கப்பட்ட உடன் அங்கே நேரில் செய்து கூக்குரல் விட்ட எஸ். எம். கிருஷ்ணா இப்போது எங்கே சென்று விட்டார்? பிரான்ஸ் -ல் சீக்கியரின் தலை பாகையை அவிழ்க்க சொன்னதற்கு நேரில் சென்று கண்டனம் தெரிவித்த பொம்மை மனிதர் மன்மோகன், இப்போது ஒன்றரை இலட்சம் தமிழர் அழிக்கபட்டதகு கண்டனம் கூட கூறாமல் என்ன செய்கிறார்!?? இவர்களுக்கு, பாகிஸ்தான் போல ஒருநாள் இலங்கையும் தன் அவதாரத்தை காட்டும் போது தான் தெரியும்... நாம் ஏறி மிதிப்பது நம்முடைய சகோதரர்களின் உயிர் போகும் தருவாயில் உள்ள உடல்களை என்று. அப்போது வருத்தப் படாதீர்கள், அவர்களின் உயிர் போக முதன்முதல் காரணம் நீங்கள் தான் என்று!!!

பன்னிரண்டு வயது சிறுவனுக்கு இருக்கும் நெஞ்சுரம், இந்திய பேரரசின் பெரிய மனிதர்களுக்கு இல்லாததை கண்டு வெட்கப்படுகிறேன்!!

தலைமுறையை தாக்கும் நிறவெறி..!!


மது நாட்டில்.. ஏன்? நமது வீட்டில் கூட நமக்கு தெரியாமல் மிகப்பெரிய சமூக பேரழிவை... நிறவெறியை தூண்டும் போக்கில் ஒரு சமூக விரோத கூட்டம் செயல்படுத்தி வருகிறது..!


"சிகப்பழகு" எனு புதுவித மன வியாதியை  மக்களுக்கு இடையே ஒரு சமூக விரோத கூட்டம் வெற்றிகரமாக விதைத்து வருகிறது..!! இது வெறும் ஆரிய மாயையை மையமாக கொண்டு எழுதபடுவதாக எண்ணவேண்டாம்..!! ஆண்களும் பெண்களும் இன்று fairness கிரீம் பயன்படுத்தும் நோக்கில், கட்டாயத்தில் கொண்டு வந்து விட்டிருக்கும், சுரண்டல் கும்பல் அறிவிற்கு எட்டாத ஒரு பேரழிவை இம்மண்ணுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர்..!


அரை நிமிட இடைவெளி வீதம், அரைமணி பொழுதில் அறுபது விளம்பரங்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனங்களும்.. அவர்கள் இந்த சமூகத்துக்கு செய்கின்ற மிக பெரிய தீங்கினை அறியாது அல்லது... அறிந்தும் அக்கறை இல்லாது செயல்படுகின்றனர்...! பொதுவாக இந்த வக்கிர கும்பலின் தீய எண்ணத்திற்கு பலியாவது இன்றைய இளைய சமூகமே..!! 


கருப்பாக இருப்பது என்னவோ தான் செய்த குற்றம் என்பது போல்.. தன்னம்பிக்கை இழந்து தவிக்கும் தலைமுறையினர் பலரை கண்டிருக்கிறேன்.. வெள்ளைக்காரன் ஆண்ட போது அவனை வெளிய துரத்தி விட்டு, அவனது தோல் நிறத்துக்காக மட்டும் நம்மையும் நம் நாட்டையும் அடகு வைத்துகொள்வது எவ்விதத்தில் நியாயம்!!??


இந்தியனின் உண்மையான நிறமே கருப்பு தானே!! இன்று மட்டும் எங்கிருந்து வந்தார்கள் .. கருப்பு என்பது தன்னம்பிக்கையின் அடையாளமில்லை என்று சொல்ல??? எங்கிருந்து வாந்தார்கள்.. கருப்பு என்பது அறுவறுப்பு என்று நஞ்சை விதைக்க..!?

சிகப்பாக இருப்பது தான் அழகின் அடையாளம் என்று கூறி நிறவெறி எனும் பேரழிவை சீரிய முறையில் பிரகடன படுத்தி உள்ளனர்... ! இதற்கு சமூக சிந்தினை சற்றும் இல்லாத நடிகர் நடிகைகள்.. கோடியை வாங்கிகொண்டு கொள்ளை நோயை பரப்பிவிடுகிறார்கள்..! 

சமூகத்தில் சாதியை முன்னிறுத்தி ஏற்ற தாழ்வை உண்டாகும் கயவர்கள் மத்தியில்.. நிறவெறி என்னும் கொலை வெறியில் சிக்கி சீரழியும் இன்றைய இளைஞர்களை எப்படி காப்பாற்றுவது???

விடியும் பொழுதெல்லாம் சிறு நடுக்கம்...



விடியும் பொழுதெல்லாம் 
சிறு நடுக்கம்...

நிதமும் 
என்னுடன் நான்
எனையறியாமல்
செய்யும் யுத்தம்!!

நான்
தட்டி எழுப்பியும் 
தலையணை தேடி 
தவறவிட்ட
கனவினைத் தேடும் 
மனம்...

விட்டுச்சென்ற
பின்னும்
விடிந்தவுடன் 
என் வீட்டு ஜன்னலுக்கு
ஏங்கும் விழிகள்...

என் மறுப்பை மீறி
உனை
எண்ணிச் சிரிக்கும் 
உதடுகள்...

உன் புகைப்படம் காண 
என் சம்மதம் கேட்டு
சண்டையிடும்
இதயம்...

இழக்காமல் 
இழுத்துப் பிடித்தும் 
தெரியாமல்
தொலைந்து போன
நான்!

கொள்ளையிட்டு 
காணாமல் போன 
நீ!!! 

இதயத்தை
தொலைத்து விட்டேன்.................
தேடியும் புண்ணியமில்லை
நீயே என்னை தொலைத்த பின்
அது இருந்தால் என்ன
இறந்தால் என்ன?????????

நான் இன்னும் தனியாக தான் நடந்து செல்கிறேன்..!!
























மஞ்சள் நிற தெரு விளக்கில்,
கரு நிற தார் சாலையில்...
தனியே நடந்து செல்கிறேன்..!

நிறமில்லா மழை துளி நனைத்திருக்க..
முகமில்லா காற்று வருடி செல்ல...
என் அகமெல்லாம் 
உன் நினைவுகள் நிறைந்திருக்க...
உன் நினைவுகள் என் கால்களை பின் நோக்கி இழுத்து செல்ல..
பற்றி பிடித்திட உன் கைகளை தேடியே..
தனியே நடந்து செல்கிறேன்..!

உனக்கு பிடிக்கும் என்பதால்..
பலவற்றை எனக்கும் பிடித்தது..!
ஆனால் இன்று ஏன் எனக்கு மிக பிடித்த உனக்கு 
என்னை அறவே  பிடிக்கவில்லை!!!??

என் கால்கள் கலைத்து போனாலும் 
என் மனம் இன்னும் உன்னை தேடி கொண்டே தான் இருக்கிறது..
ஆமாம்,
நான் இன்னும் தனியே தான் நடந்து செல்கிறேன்..!

உன்னோடு நான் பேசிய ஒவ்வொரு வார்த்தையும்..
உன்னோடு நான் பேச என்னும் ஒவ்வொரு வார்த்தையும்..
எனக்குள் ஆயிரம் ஆயிரம் ஒத்திகை காண்கிறது..!
எங்கெங்கோ போகும் சாலையில் 
இறங்கி நடக்கின்றேன்..!
முடிந்துவிட்ட சாலையை வெறித்து பார்த்துவிட்டு..
இங்கேயே இறந்து விடுமோ நம் காதல் என்று..
கண்ணீர் சிந்தியே வழி மறந்து 
நான் இன்னும் தனியே தான் நடந்து செல்கிறேன்..!!

நீ மறந்து விட்ட பல நிகழ்வுகளை 
காகிதத்தில் எழுதி வைக்கவில்லை நான்!!
பாதுகாப்பாய் என் இதயத்தின் 
சதைப்பகுதியில் செதுக்கி வைத்திருக்கிறேன்..!
நேரம் இருந்தால் வந்து எட்டி பார்த்துவிட்டு செல்..!

உனக்கெப்படி தெரியும்..!?
நீ என்னை எப்படி எல்லாம் நேசித்தாய் என்று..!
உன் உதடுகளை கேட்டு பார்..
என் உதட்டை வர்ணித்த கதை சொல்லும்..!

மனமிருந்தால் வந்து சேர்..!
நான் இன்னும் தனியாக தான் நடந்து செல்கிறேன்..!!