Saturday, July 14, 2012

விடியும் பொழுதெல்லாம் சிறு நடுக்கம்...



விடியும் பொழுதெல்லாம் 
சிறு நடுக்கம்...

நிதமும் 
என்னுடன் நான்
எனையறியாமல்
செய்யும் யுத்தம்!!

நான்
தட்டி எழுப்பியும் 
தலையணை தேடி 
தவறவிட்ட
கனவினைத் தேடும் 
மனம்...

விட்டுச்சென்ற
பின்னும்
விடிந்தவுடன் 
என் வீட்டு ஜன்னலுக்கு
ஏங்கும் விழிகள்...

என் மறுப்பை மீறி
உனை
எண்ணிச் சிரிக்கும் 
உதடுகள்...

உன் புகைப்படம் காண 
என் சம்மதம் கேட்டு
சண்டையிடும்
இதயம்...

இழக்காமல் 
இழுத்துப் பிடித்தும் 
தெரியாமல்
தொலைந்து போன
நான்!

கொள்ளையிட்டு 
காணாமல் போன 
நீ!!! 

இதயத்தை
தொலைத்து விட்டேன்.................
தேடியும் புண்ணியமில்லை
நீயே என்னை தொலைத்த பின்
அது இருந்தால் என்ன
இறந்தால் என்ன?????????

No comments:

Post a Comment