Sunday, July 22, 2012



கடற்கரையில்...
என் கை எனும் தூரிகையால்
தீட்டப்பட்ட ஓவியம்..
உன் பெயர்..!

கடல் மணலில்..
என் கையிலிருந்து 
உதிர்கின்ற 
உனது பெயரின் எழுத்துக்கள்..!

விரைந்து வரும் ...
அலைகளைப் பார்த்துப்
பயந்தபடி....
என் கைகளில் ஏற முயல்கிறது...
உன் பெயர்.

ஏனோ...
தயங்கித் தரை பார்க்கிறது.
வெறுமைப் பார்வையோடு நான்.

தடுக்க இயலாத என்னைத் தாண்டி...
அலைகளால் கலைந்து...
அழுதபடி செல்கிறது உன் பெயர்...
கடலுக்குள்...
முதல் நாள் பள்ளி செல்லும்
சிறு குழந்தைகள் போல.

இந்தக் கணத்தில்...
என்னை மறுக்கவும் இயலாமல்..
ஏற்கவும் இயலாமல்...
தவிக்கும் உன் முகமாய்...
மாறுகிறது
எனது முகம்.....

No comments:

Post a Comment