Saturday, July 14, 2012

மனம் மரணமடைந்தது !!!















உன் வாசம் படிந்த கைக்குட்டை...
உன்னுடன் கண்டு களித்த சினிமா டிக்கெட்..
ஓயாமல் சிரிக்கும் உன் புகைப்படம்..
காதலுடன் நீ கைபேசியில் அனுப்பிய முத்தங்கள்.. என 
உன்னை மட்டுமே நினைத்துக் கொண்டே
இருக்க வேண்டும் என நான் பத்திரப்படுத்திய
உன் நினைவுகள் அனைத்தும் வெறும் 
நினைவுச் சின்னங்களாய் மட்டுமே போய் விடுமோ என
சத்தியமாய் நான் நினைக்கவில்லை...

என் வசந்த காலத்தின்
ஒரு பக்கம் முற்றிலும்
இலையுதிர் காலமாய் மாறிப்போனது..!

நீ எதை சொன்னாலும் 
அப்படியே நம்பிவிடும் மூடன் நான், 
என்று தெரிந்துதான் சொன்னாயோ..?
இதயத்தில்.. 
திராவகம் வீசிய உணர்வை ஏற்படுத்திய 
இரக்கமில்லாத...
கொடூரமான... 
அந்த 
"பிரிந்து விடுவோம்" 
என்ற வார்த்தையை..??

"மனம் மரணமடைந்தது" என்ற ஷெல்லியின்
வார்த்தையை அனுபவித்து உணர்கிறேன் இன்று ...!


No comments:

Post a Comment