Saturday, July 14, 2012

விடையறியாமல்..!!



















வெகுதூரத்தில்
சிறு புள்ளியாய் உன் உருவம்…
இருந்தும்,
நீ விலகிச் சென்றதை
நம்ப மறுத்து
அசையாமல் அவ்விடமே
காத்து நிற்கும் எனது கால்கள்!!!

ஓயாமல் ஒதுங்கியும்
உன்னுடன் கழித்த
மணித்துளியை
புரட்டத் தவறாத என் மனம்…
இருந்தும்,
அருகில் இருப்பவர் கண்டும்
ஈரம் காய மறுக்கும்
எனது கண்கள்!!!

உனது பெயரை
உச்சரித்தே ஓடும்
எனது எண்ணங்கள்…
இருந்தும்,
எத்தனையோ கேள்விகளுக்கு
விடையறியாமல்
ஒட்டிக்கொண்ட உதடுகள்…
விடைகளுடன்
விக்கியபடி
எனது தொண்டைக்குழி !!!

No comments:

Post a Comment